என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில், ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
- நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
- தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல் அறிய மற்றும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த முகாமில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்