search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ராணுவ வீரரை தாக்கி மிரட்டல்: எஸ்.பி.அலுவலகத்தில் மனு
    X

    ராணுவ வீரரை தாக்கி மிரட்டல்: எஸ்.பி.அலுவலகத்தில் மனு

    • கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பரம் பஞ்சாயத்திற்குட்பட்ட புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(வயது 48). சாலை பணியாளர்.

    இவருக்கு சதீஷ்(28), கார்த்திகேயன்(25) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவ வீரர் சதீஷ், குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ராணுவ வீரரான நான் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளேன். எங்கள் வீட்டருகே வசிப்பவர் முருகேசன். அவர் எங்கள் தந்தையிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பித் தரவில்லை.

    இது குறித்து கேட்டபோது முருகேசன், அவர் மனைவி சீதா, அவர் தம்பி விஜி உள்ளிட்ட ஏழு பேர் கும்பல் கடந்த 3-ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசில் புகார் அளித்தோம். வழக்கு பதியப்பட்ட நிலையில், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் முருகேசன் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×