search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
    X

    தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

    • சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார்.
    • முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவரிடம் இருந்து அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாரியப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    Next Story
    ×