என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் அஷ்டபைரவர் யாகம்
- பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை.
- பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மகா அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ணகால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.
ஒன்பது யாக குன்டங்கள் அமைத்து சிவாச்சார்யர்கள் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சந்திரசேகர சிவம் தலைமையில் வேதகோஷங்கள் முழங்க யாகபூஜைகள் நடைபெற்று. மகா பூர்ணா ஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ பைரவர் சன்னதியை வந்தடைந்து 18 வகை திரவியங்கள், பன்னீர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. ஹம்ஸத்வணி இசைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர் பரணீதரன் தலைமையில் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துக்கொண்ட பக்தகோடிகளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலய அறங்காவலர் ராஜராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் செந்தில்குமார், சதானந்தன், பா.ஜ.க. நிர்வாகிகள் அழகிரிசாமி, இளங்கோவன், சேவாபாரதி நிர்வாகிகள் ரங்கதுரை, மும்மூர்த்தி. சமூக ஆர்வலர் ராஜதுரை, கருப்பசாமி, ஆலய நிர்வாகி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்