search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூவலூரில், முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டம் நடந்தது.

    மூவலூரில், முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

    • முன்னதாக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.
    • முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திமுக சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மூவலூரில் நடைபெற்றது.

    இந்த கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் ஆலோசனைபடி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம். மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் பாலு, ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, துணை செயலாளர்கள் சிவக்குமார், பாரதிமதியழகன், அற்புதராஜ், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் நாகம்மை கருப்பையா கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாத னைகளை பொதுமக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்நிலை திட்டகுழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், கழக பேச்சாளர் கோமல் விஜி அறிவழகன், முன்னாள் நகர கவுன்சிலர் மேனகா மாரியப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்தி, தொ. மு. ச. மண்டல செயலாளர் ஆபிரகாம், மாவட்டம் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மும்தாஜ், பதர்நிஷா நஜீம், சிவக்குமார், அர்ஜுன், காமராஜ், கபிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஐயப்பன், முஹம்மது ஹரிப், சபாபதி, தேவராஜன், ராஜேஷ், ரமணி, ஆனந்தி தர்மராஜ், மாலதி கதிரவன், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய கிளை பிரதிநிதிகள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×