search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் அரசுத்துறை தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
    X

    சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் அரசுத்துறை தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் அரசுத்துறை தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார்

    கடலூர்:

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குருப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை கடலூர் மாவட்ட மைய நூலகமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறது, இப்பயிற்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர்.நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் மணிகண்டன், சசிகுமார், பிரபாகரன், வெங்கடசேன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டியாளர்களை தேர்வு சேய்தனர். ஓவியா முதல் இடத்தையும், சரண்யா 2-ம் இடத்தையும், சுபாஷினி 3-ம் இடத்தையும் பெற்றனர். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அரிமா. பாஸ்கரன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.கிராமப்பகுதிகளில் இருந்து ஏழை மாணவ மாணவியர்கள் பெருவாரியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட செயற்குழ உறுப்பினர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

    Next Story
    ×