search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேளாங்கண்ணியில், இரு தரப்பினரிடையே மோதல்; 7 பேர் படுகாயம்
    X

    வேளாங்கண்ணியில், இரு தரப்பினரிடையே மோதல்; 7 பேர் படுகாயம்

    • ரூ.20 ஆயிரம் மட்டுமே வாடகை பேசியதால் கூடுதலாக கட்டணம் தர முடியாது.
    • 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை கொளத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில், பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு இறுதியாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்தார். அப்பொழுது சுற்றுலா வேனிற்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்லை என ஓட்டுனர் அசோக்குமார் கூறி அதற்கு ரூ.2000 கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை பேசியதாலும் கூடுதலாக கட்டணம் தர முடியாது என ஹரிஹரன் தரப்பினர் கூறியுள்ளனர் .

    இது குறித்து ஓட்டுனர் தனது வேன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அதை அடுத்து வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹரிஹரன் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ரூ.2000 கூடுதலாக கொடுக்க வேண்டும் என வாக்குவா–தத்தில் ஈடுபட்டனர். இதில் ஹரிஹரன் தரப்பினர் கார் ஓட்டுனர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . சுமார் 20 பேர் கொண்ட கார் ஓட்டுநர்கள் வந்து ஹரிஹரன் தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் இரண்டு தரப்பிலும் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×