என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல்
- இருவரும் பணி நிமித்தமாக கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சென்று வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
- பின்தொடர்ந்து வந்த 4 பேரும் திடீரென பொன்குணசேகரன், சுதாகர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மன்னார்குடி சரகத்தில் கள மேலாளராக பணிபுரிபவர் பொன் குணசேகரன் (வயது 59). இந்நிலையில் இவர் மற்றும் மேற்பார்வையாளர் சுதாகர் இருவரும் பணி நிமித்தமாக கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சென்று வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் வந்தனர்.
வடுவூர் அருகே தற்காசு எனும் இடத்தில் வந்தபோது பொன்குணசேகரன் வாகனத்தை நிறுத்தினார். அப்போது பின்தொடர்ந்து வந்த 4 பேரும் திடீரென பொன்குணசேகரன், சுதாகர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த பொன்குணசேகரன், சுதாகர் ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பொன்குணசேகரன் வடுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பைங்கானாடு தொடக்க கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் செயலாளர் மலர்வேந்தன் தூண்டுதல் பெயரில் தான் எங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எனவே அவர் மற்றும் எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்