search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டுப்பாளையத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல்-2 பேர் கைது
    X

    மேட்டுப்பாளையத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல்-2 பேர் கைது

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • 2 பேர் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் சாலை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் இவரது மனைவியுடன் பெட்டி கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு வந்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரை சேர்நத அருன்குமார் (25), சிறுமுகை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(21) ஆகியோர் கடையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் இவரது மனைவி ஆகியோரிடம் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீராமையும் இவரது மனைவியையும் அருன்குமார், தீபக் ஆகியோர் தாக்கி உள்ளனர்.

    இதையடுத்து இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அருன்குமார், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×