என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் மீது தாக்குதல்
- சதாம் உசேன், அந்த பெண்ணுடன் உள்ள உறவை கைவிட்டு விடுமாறு முகமது ஆசாத்தை கண்டித்துள்ளார்.
- உக்கடம் போலீசர் 3 பேரை கைது செய்தனர்.
கோவை,
கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் சதாம் உசேன்(வயது 29).
இவர் காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரின் உறவுக்கார இளம்பெண் ஒருவருக்கும், கரும்புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த முகமத் ஆசாத்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இந்த விவகாரத்தை அறிந்த சதாம் ஹூசைன், அந்த பெண்ணுடன் உள்ள உறவை கைவிட்டு விடுமாறு முகமது ஆசாத்தை கண்டித்துள்ளார்.
ஆனால் அவர் அந்த இளம்பெண்ணுடனான தொடர்பை தொடர்ந்து வந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று சதாம் உசேன் உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் முகமத் ஆசாத் உட்பட 3 பேர் வந்தனர். அவர்கள் மீண்டும் சதாம் உசேனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி சதாம் உசேனை தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து அவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை தாக்கிய கரும்புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த ஏசி மெக்கானிக் முகமத் ஆசாத்(28), போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த லியோ ஜோசப்(32), குறிச்சி பிரிவை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்