என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கி நகை, பணம் பறிப்பு
- தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
- அவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.
தேனி:
தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கனகராஜன் மகள் சூர்யகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சூர்யகலா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை பார்க்க கந்தன்ராஜன் மாமனார் வீட்டிற்கு சென்றார். தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
இதில் இருதரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கந்தன்ராஜனை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கனகராஜன் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்