என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மாணவர்கள் முன்னுதாரணமாகவும் தெளிவான முறையில் தங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
- மாணவர்களுக்கு எளிமையான முறைகளும் மிமிக்கிரி செய்தும் நகைச்சுவை வழியாகவும் அறிவுரை வழங்கினார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியரை கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் மாணவ ர்களுக்கான விழிப்பு ணர்வு மற்றும் மாணவர்களை வளப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர். காமராஜ் தலைமை தாங்கி பேசும் போது, கற்க கசடற கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறலுக்கு ஏற்ப மாணவர்கள் முன்னுதாரணமாகவும் தெளிவான முறையில் தங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அப்துல் கலாமின் சீடரும் பிரபல நகைச்சுவை நடிகருமான தாமு பேசுகையில்,கலாமை வழிபடும் மாணவன் நான் என்பதில் பெருமிதம் கொள்வ தாகவும் அப்துல் கலாமின் பொன்மொ ழியான உறங்கும் போது வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்ற அவரின் கோட்பாட்டை மாணவ ர்களுக்கு எளிமையான முறைகளும் மிமிக்கிரி செய்தும் நகைச்சுவை வழியாகவும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் சி. பி. ஜி .அன்ப ழகன், முதல்வர் வேலவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெ. இளங்கோ, துணைத் தலைவர் பாலசுப்பி ரமணியன் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவி னை சிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்