search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போட்டியில் வெற்றிபெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பள்ளியில் பயிலும் 190 மாணவர்கள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்துமேல்நிலை ப்பள்ளியில் சென்னையில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் குறித்தவி ழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 190 மாணவ-மாணவிகள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியிலும், 42 மாணவ-மாணவிகள் சதுரங்க விளையாட்டு குறித்த பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை யில் நடந்தது.

    பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளித்து ணை ஆய்வாளர் செளந்த ரராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன், ஓவிய ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.

    Next Story
    ×