என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
- ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
- குருசாமி பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார்.
தருமபுரி,நவ.17-
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சபரிமலைக்கு மாலை அணிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் கொள்வார்கள். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டல பூஜைக்காக 42 நாட்கள் நடை திறந்திருக்கும்.
இந்நிலையில் இன்று கார்த்திகை முதல்நாள் என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீரில் புனித நீராடி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். அதேபோல தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி நேற்று அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம், 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி காலை, 5 மணிக்கு கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
ஐயப்பன் கோவிலில் உள்ள குருசாமி பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. நேற்று, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்