search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது
    X

    அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது

    • கால்கோல் விழா நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் துவங்கியது.
    • 100 பேர் தங்கள் காளைகளை பதிவு செய்துள்ளதாக தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    திருப்பூர் :

    அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 29ந்தேதி போட்டி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் கால்கோல் விழா நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் துவங்கியது.

    இதற்கு அலகுமலை ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையிலான ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்த சப் கலெக்டர், போட்டிக்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு கூறியதால் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான காளைகள் முன்பதிவு துவங்கியது. காளைகளைப் பதிவு செய்ய பலர் ஆர்வம் காட்டினர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 100 பேர் தங்கள் காளைகளை பதிவு செய்துள்ளதாக தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    Next Story
    ×