search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் தொழிலாளிக்கு சரமாரி வெட்டு-3 வாலிபர்களுக்கு வலைவீச்சு
    X

    தூத்துக்குடியில் தொழிலாளிக்கு சரமாரி வெட்டு-3 வாலிபர்களுக்கு வலைவீச்சு

    • நேற்று இரவு தொழிலாளி மகே தனது வீட்டு முன்பு நின்ற போது வந்த 3 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.
    • முகேஷ் தலைமறைவாகி விட்டதால் அவரது நண்பரான மகேசை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தவராஜ். இவரது மகன் மகேஷ்(வயது 19). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 3 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாடசாமி(19), முத்துகுமார், தடிக்காரன்(20) ஆகியோர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடந்த 5-ந்தேதி மாடசாமியின் தந்தை முத்துக்குமார்(39) என்பவரை மகேசின் நண்பர் முகேஷ் தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் முகேஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் தனது தந்தையை தாக்கியவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். ஆனால் முகேஷ் தலைமறைவாகி விட்டதால் அவரது நண்பரான மகேசை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×