search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆற்றில் குளித்து கொண்டு இருந்த கல்லூரி மாணவரின் செயின் திருட்டு
    X

    ஆற்றில் குளித்து கொண்டு இருந்த கல்லூரி மாணவரின் செயின் திருட்டு

    • செயினை கழற்றி ஆடையுடன் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்.
    • 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

    கோவை,

    கோவை நல்லாம்பா ளையம் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 19). கல்லூரி மாணவர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் கல்லாறு தூரிபாலம் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது லோகேஸ்வரன் தனது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை கழற்றி ஆடையுடன் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் லோ கேஸ்வரனின் செயினை திருடி தப்பி ஓடினர். இதனை பார்த்த கல்லூரி மாணவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்தார். பின்னர் 3 பேரையும் மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காரமடையை சேர்ந்த லோடுமேன் பழனிசாமி (29). மேலும் 17,15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லோடுமேன் பழனிசாமியை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×