search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிணத்துக்கடவு அருகே பைனான்ஸ் ஊழியர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
    X

    கிணத்துக்கடவு அருகே பைனான்ஸ் ஊழியர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

    • மது குடிக்க பணம் கொடுக்காததால் கும்பல் ஆத்திரம் அடைந்தனர்.
    • இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் கதிரேஷ் (வயது 24). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மதுகுடிக்கச் சென்றார்.

    அங்கு அவர் வசிக்கும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ராசுக்குட்டி (21) என்பவரும், அவரது நண்பர்களான நவீன், இளங்கோ ஆகியோரும் வந்தனர். அவர்கள் கதிரேசிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் கதிரேஷ் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்து பணம் கொடுக்க மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராசுக்குட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கதிரேசை தாக்கினார். அவருடன் சேர்ந்து அவரது நண்பர்களும் சேர்ந்து கதிரேசை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த ரூ.2700 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட கதிரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து கதிரேஷ் கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுக்குட்டி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×