search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக் ஊர்வலம்: போலீசார் வாக்குவாதம்
    X

    வேலூரில் பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக் ஊர்வலம்: போலீசார் வாக்குவாதம்

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் பா.ஜ.க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரீன் சர்க்கிளில் இருந்து கோட்டை வரை பைக்கில் பேரணியாக வந்து கோட்டை கொத்தளத்திற்கு தேசிய கொடியுடன் செல்ல உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    கோட்டைக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்க வில்லை. இதனால் பா.ஜ.க.வினர் கோட்டைக்குள் செல்வதை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கோட்டை வாயில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை முதல் பொதுமக்கள் யாரையும் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக்கில் கோட்டை நுழைவு வாயிலுக்கு வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோட்டைக்குச் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக நடந்து சென்று சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே ஊர்வலத்தை முடித்தனர்.

    பா.ஜ.க.வினரின் பைக் பேரணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோட்டை நுழைவுவாயில் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×