search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாணவியை தாக்கிய வாலிபர் தாயுடன் போக்சோவில் கைது
    X

    மாணவியை தாக்கிய வாலிபர் தாயுடன் போக்சோவில் கைது

    • மாணவி அவருடைய தாயுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர்களை வழிமறித்து சுதாகர், மாணவியை காதலிப்பதாக கூறி மிரட்டி உள்ளார்.
    • இதில் சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஒரு கிராம பகுதியை சேர்ந்த் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    தஞ்சை அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 21). இவர் பள்ளி மாணவியான சிறுமியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    மாணவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தன்னை காதலிக்க சுதாகர் வற்புறுத்தி வந்துள்ளார்.

    இது குறித்து மாணவி அவருடைய தாயாரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாய் சுதாகரின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

    அப்போது சுதாகரின் தாயான கலையரசி என்பவர் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று தாயிடம் கூறியுள்ளார்.

    சம்பவதன்று மாணவி அவருடைய தாயுடன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர்களை வழிமறித்து சுதாகர், மாணவியை காதலிப்பதாக கூறி மிரட்டி உள்ளார்.அப்போது சுதாகர் மாணவியின் கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

    அதனை தடுக்க முயன்ற மாணவியின் தாயையும் சுதாகர் தாக்கி உள்ளாரர். இதில் சிறுமி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுதாகர் (வயது 21) மற்றும் சுதாகரின் தாயார் கலையரசி (45) ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×