search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலத்தில்  2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
    X

    சேலத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

    • சரவணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.
    • காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சர வணபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்க்க வெளியே சென்றார்.

    இன்று காலை வீடு திரும்பியபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.22,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஜோதிமணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    இதே போல் அழகாபுரம் நகரமலை அடிவாரம் சரவணா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. காவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 11 பவுன் தங்க மோதிரம், ரூ.5500 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×