என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சொத்து தகராறில் அண்ணன் மண்டையை உடைத்த தம்பி கைது
- வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
- வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவரை தாக்கி கொண்டனர்.
பாப்பிரெட்டிபட்டி,
தருமபுரி மாவட்டம்,பொம்மிடி அருகே உள்ள நத்த மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் பெரியசாமி (43), இளைய மகன் சக்திவேல் (41). இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவரை தாக்கி கொண்டனர். இவர்களை அவர்களது உறவினர்கள் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர்.
இதில் எதிர்பாராதவிதமாக சக்திவேல் அவருடைய அண்ணன் தலையை கட்டையால் அடித்து உடைத்தார்.பலத்த காயமடைந்த பெரியசாமி தலையில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ெபாம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்