என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேடர்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா
- அரசுஅனுமதி பெற்று எருது விடும் விழா நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா இம்மிடிநாயக்கனப்பள்ளி அருகே பேடர்பள்ளி கிராமத்தில் அரசுஅனுமதி முலம் எருது விடும் விழா நடைபெற்றது.
இந்தவிழாவிற்கு இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடர் ப்பள்ளி, சின்னார், ஒடையனுர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல் பள்ளம், மேலுமலை, காளிங்காவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுக்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.
300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. அரசு விதிகளின் படி எருது ஒடுபாதை அமைத்து இரு புறமும் தடுப்பு சுவர் அமைத்து பார்வையாளர்களுக்கு எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அமைக்கப் பட்டு இருந்தது.
எருதுகளை வரிசையில் நிற்க வைத்து அதன் பின் நம்பர் மூலம் அறிவிப்பு செய்த பின்பு ஒட விட்டனர் .இந்த விழாவிற்கு சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி தலைமையில் காவலர்கள் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கால்நடை மருத்துவர்கள் வருகை தந்து முகாம் அமைத்து இந்தனர். அரசு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் எருது விடும் விழா நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்