search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேடர்பள்ளி கிராமத்தில்  எருது விடும் விழா
    X

    பேடர்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா

    • அரசுஅனுமதி பெற்று எருது விடும் விழா நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா இம்மிடிநாயக்கனப்பள்ளி அருகே பேடர்பள்ளி கிராமத்தில் அரசுஅனுமதி முலம் எருது விடும் விழா நடைபெற்றது.

    இந்தவிழாவிற்கு இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடர் ப்பள்ளி, சின்னார், ஒடையனுர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல் பள்ளம், மேலுமலை, காளிங்காவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுக்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.

    300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. அரசு விதிகளின் படி எருது ஒடுபாதை அமைத்து இரு புறமும் தடுப்பு சுவர் அமைத்து பார்வையாளர்களுக்கு எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அமைக்கப் பட்டு இருந்தது.

    எருதுகளை வரிசையில் நிற்க வைத்து அதன் பின் நம்பர் மூலம் அறிவிப்பு செய்த பின்பு ஒட விட்டனர் .இந்த விழாவிற்கு சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி தலைமையில் காவலர்கள் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கால்நடை மருத்துவர்கள் வருகை தந்து முகாம் அமைத்து இந்தனர். அரசு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் எருது விடும் விழா நடந்தது.

    Next Story
    ×