search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலாம்பூர் அருகே டியூசன் ஆசிரியை வீட்டில் கொள்ளை
    X

    நீலாம்பூர் அருகே டியூசன் ஆசிரியை வீட்டில் கொள்ளை

    • ஸ்ரீனிவாசன் உஸ்பெகிஸ்தானில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
    • பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    நீலாம்பூர்

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் உஸ்பெகிஸ்தானில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சந்தியா (வயது 32). டியூசன் ஆசிரியை. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.

    அப்போது சந்தியா வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய சந்தியா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை வீட்டில் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×