search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழியாரில்  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காமிரா பொருத்தம்
    X

    ஆழியாரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காமிரா பொருத்தம்

    • பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.
    • விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன. பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகம் அருகே உள்ள ஆழியாறு அணை புளியங்கண்டி பகுதி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் அந்த பகுதியில் 4 தானியங்கி காமிராக்களை நேற்று பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×