என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கஞ்சா விற்றவர் கைது
- பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.
- துணிப்பைக்குள் பிளாஸ்டிக் பாலிதின் கவரில் 250 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு டி.எஸ்.பி சிந்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் கஞ்சா விற்பனை குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திம்லாமேடு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.
போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் துணிப்பைக்குள் பிளாஸ்டிக் பாலிதின் கவரில் 250 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரனையில் மாரண்டஅள்ளி அருகே திம்லாமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது48) என்பதும், இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 2500 ரூபாய் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சா பொட்டலங்ககளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்