search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்கு
    X

    144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்கு

    • 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
    • கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாண்டி யன்குப்பம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்தியுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த கபாடி போட்டி நடத்துவதற்கு காரணமாக இருந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×