என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் வரதட்சணை கேட்ட கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- சிங்கப்பூருக்கு சென்றபிறகு ஒருமுறை கூட தனது மனைவியிடம் தேவன் செல்போனில் பேசமால் இருந்து வந்துள்ளார்.
- கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கம்மளாப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் அனுசியா (வயது22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தேவன் (31) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் தேவன் டிப்ளமோ முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காததால் வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு கடன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக தேவனுக்கு அவரது அண்ணன் சென்னகேசவன் (40) வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்.
சிங்கப்பூருக்கு சென்றபிறகு ஒருமுறை கூட தனது மனைவியிடம் தேவன் செல்போனில் பேசமால் இருந்து வந்துள்ளார். சிங்கப்பூரில் ஒரு வருடம் மட்டும் வேலை செய்துவிட்டு மீண்டும் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
அப்போது தனது மனைவி அனுசியாவிடம் தேவன் பேசமால் இருந்து வந்தார். இதுகுறித்து அவரது மனைவி தட்டி கேட்டபோது, அவரிடம் 15 பவுன் நகை, சொந்தமாக வீடு ஒன்று வேண்டும், அதன்பிறகுதான் அனுசியாவுடன் குடும்பம் நடத்துவேன் என்று தேவன் கூறினார்.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தேவன் தனது மனைவியை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து அனுசியா அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் அனுசியாவின் கணவர் தேவன், அண்ணன் சென்னகேசவன், அண்ணி செண்பகவள்ளி (35) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்