search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த கும்பல்- சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள்.

    தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த கும்பல்- சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

    • ராஜேசின் கையில் இருந்த செல்போனை 8 பேர் கொண்ட கும்பல் பறித்து கொண்டு தப்பி சென்றது.
    • 8 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர்காலனியில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

    செல்போன் பறிப்பு

    இங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது28). என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜேஷ், சக ஊழியர்களுடன் நிறுவன வளாகத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென ராஜேசின் கையில் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேல் (30) என்பவர் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார் வையில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தனிப்படை காவலர் செல்வின் ராஜா, நகர உட்கோட்ட காவலர் மாணிக்கராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தி வந்தனர். இதில் செல்போனை பறித்து சென்றது தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் (20), வெங்கடேஷ் (19), மாரிமுத்து (19), சுரேஷ் (19), செந்தில் (19), ஜோஸ்வா டேனியல் (19) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×