search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரூர் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    அரூர் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

    • தருமபுரி அருகே பெண்ணிடம் செயின் பறித்து சென்ற 2 பேருக்கு வலை வீச்சு
    • கடையில் பொருள் வாங்குவது போல சம்பவம்

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கே. வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அறவேந்தன்(37). இவர் தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இதனை இவரது தாயும், தம்பியும் சேர்ந்து வியாபாரம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அறவேந்தன் தாய் மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கடையில் இருந்த பெண்ணிடம் சாமன் வாங்குவது போல பாவனை செய்து உள்ளனர்.

    அவர்கள் கேட்ட பொருளை எடுத்து கொண்டு அவர்கள் அருகில் வந்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறித்து சென்றனர். இது குறித்து அறவேந்தன் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×