search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
    X

    அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி

    • பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25-ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ. துரை சதுரங்க போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட சதுரங்க விளையாட்டு போட்டி செயலாளர் சிலம்பரசன், துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவில் பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25 -ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×