search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
    X

    கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழாவில் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாடல்கள் பாடிய காட்சி.

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

    • கிறிஸ்துவின் பிறப்பை சிறப்பிக்கும் வேத பாடங்களை மாணவ, மாணவிகள் வாசித்தனர்.
    • ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் குடில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீதஆராதனை நடைபெற்றது

    இதில் இஸ்ரேல் ராஜசிங் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் நற்செய்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி அனைத்து துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கிறிஸ்துவின் பிறப்பை சிறப்பிக்கும் வேத பாடங்களையும் வாசித்தும், கிறிஸ்துவ கீதங்கள் பாடினர். மேலும் கல்லூரியில் பேரா சிரியர்கள், அலுவலர்களும் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களை பாடினர்.

    புத்தாண்டுக்கான வாக்குத்தத்த வசனங்களை இஸ்ரேல் ராஜசிங், பெர்சி பத்மாவதி ஆகியோர் அளித்து மாணவ, மாணவிகளை ஆசீர்வதித்தனர்.

    விழாவில் ஸ்டீபன் தலைமையில் கார்பர் ஹார்மோனீஸ் பாடகர் குழு வினர் கிறிஸ்துவ கீதங்களை இசைத்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உணர்த்தும் கிறிஸ்மஸ் குடிலும் கல்லூரியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருந்தது.

    ஆராத னையில் கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார், தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் , பிரியா பிரகாஷ் ராஜ்குமார், மற்றும் கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், ஐ.எம்.எஸ். ஊழியர் தாமஸ் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கல்லூரி சார்பில் ஏழை, எளியோருக்கு பரிசு பொருட்கள், இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    Next Story
    ×