search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
    X

    கலை நிகழ்ச்சிகள் நடந்த போது எடுத்தபடம்.

    பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

    • பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
    • ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரில் நரசிம்மாச்சாரி தெருவில் உள்ள செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவினை ஒட்டி எல்.கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று நடத்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமனிந்து வந்தவர் பள்ளி குழந்தைகளிடம் கேட்ட அறிவுபூர்வமான வினாக்களுக்கு பதில் அளித்த குழந்தைகளுக்கு சாக்லேட்டை பரிசாக வழங்கினார். குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி களை ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கண்டு ரசித்தனர்.

    இவ்விழாவில் பள்ளியின் தலைவர் மணிமேகலை கந்தசாமி, நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முதல்வர் வள்ளியம்மை உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×