என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோத்தகிரியில் காதலனுடன் தகராறில் கோவை பெண் ஊழியர் தற்கொலை
- சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக இறந்தார்.
- இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி,
கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மாதவி (வயது 21) என்ற மகளும் உள்ளனர். மாதவி கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் விடுமுறையை ஒட்டி மாதவி தனது சொந்த ஊரான சோலூர்மட்டம் வந்திருந்தார். கடந்த 7-ந் தேதி மாதவியும், அவரது தாயாரான ராஜம்மாளும் கோத்தகிரி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்தனர். மாதவி அவரது தாயாரிடம் மற்றொரு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் மாதவி வராததால் அவரை தேடி ராஜம்மாள் சென்றார்.
அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாதவி விஷத்தை குடித்து விட்டு அமர்ந்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக இறந்தார்.
மாதவி, அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்