என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவை, நீலகிரியில் களை கட்டிய ஓணம் கொண்டாட்டம்
- ஓணப்பண்டிகை விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.
- கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
கோவை,
கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும் கோவை மாநகர், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.
கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் ஓணம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மலையாள பாடல்களுக்கு மாணவிகள், பேராசிரியைகள் நடனமாடி அசத்தினர்.
கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, மாவே லியை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலமிட்டனர். இதுமட்டுமில்லாமல் திருவாதிரைக்களி உட்பட மலையாள பாடல்களுக்கு ஏற்ப மாணவிகளும், பேராசிரியைகளும் நடனமாடி அசத்தினர்.
தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளக் கலை ஞர்கள் இசை வாத்தியங்கள் இசைக்க, கேரள பாரம்ப ரிய கதகளி நடனம் அனை வரையும் வெகுவாக கவர்ந் தது.
பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்