search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் ஆய்வு
    X

    சூளகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு குறித்து கலெக்டர் சரயு ஆய்வு செய்த காட்சி.

    மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் ஆய்வு

    • சூளகிரியில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெண்களுக்கு வீடு, வீடாக அரசு ஊழியர்க்ள விநியோகம் செய்து வருகின்றனர்.

    சூளகிரி, ஜூலை.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மாதிரி முன்னோட்ட விண்ணப்ப பதிவு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாயவிலைக்கடைகளில் உள்ள 5,64,624 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக நாளை வரை தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    2-ம் கட்டமாக பதிவு செய்யும் நபர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், மேற்படி ஒப்புதல் ரசீதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் என்ன தேதியில் எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்ற விவரம்ப திவு செய்யப்பட்டிருக்கும். மேற்படி விவரம் தினந்தோறும் விற்பனை–யாளரால் விளம்பரப் பலகையில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் (குடும்பத்தலைவி மட்டும்) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமிற்கும் ஒரு முகாம் பொறுப்பு அலுவலர், ஒரு காவலர், ஒரு உதவி மைய தன்னார்வலர்கள் அலுவலர், ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பதிவாளர் வீதம் பணிய மர்த்தப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக 584 இடங்களில் 823 பதிவாளர்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை பதிவு செய்யப்பட உள்ளனர்.

    மாவட்ட அளவில் மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் 2-ம் கட்டமாக மீதமுள்ள 510 இடங்களில் 774 பதிவாளர்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை பதிவு செய்ய திட்டமி டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×