search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமை வீடு கட்ட 4 பயனாளிகளுக்கு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்
    X

    புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    பசுமை வீடு கட்ட 4 பயனாளிகளுக்கு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்

    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரம் உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க உள்ளது.
    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 431 மனுக்கள் பெறப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 431 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×