search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கரின் உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மரியாதை
    X

    அம்பேத்கரின் பிறந்த நாளைமுன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அம்பேத்கரின் உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மரியாதை

    • அம்பேத்கார் உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    திருவாரூர்:

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளைமுன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழியி னையும் எடுத்துக் கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும் உளமாற உறுதி ஏற்று கொள்வோம். இவ்வாறு கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×