search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X

    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

    குமாரபாளையத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    • குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
    • இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப் பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளதை யும், ஜல்லிக்கட்டு மைதா னத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை யும், காளைகள் வெளி யேறும் இடத்தில் மைதா னத்தை சுற்றிலும் இரண்ட டுக்கு தடுப்புகள் அமைக்கப் பட்டு, காளைகளை உரிமை யாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதை யும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை யும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணி யினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தையும், பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் பார்வை யிட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாது காப்பாக, மைதானத்தில் தேங்காய் நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறி வுறுத்தியுள்ள விதிமுறை களின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் அறிவுறுத்தி னார்கள்.

    நிகழ்ச்சியில், திருச்செங் கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×