search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
    X

    (கோப்பு படம்)

    விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    • தந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க தாய் அனுமதிக்கவில்லை.
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வருவதாக தாயிடம் கல்லூரி மாணவி அடம் பிடித்துள்ளார்.

    வீட்டிலேயே இருக்க தாய் அறிவுறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மணி நகரை 18 வயதான மாணவி விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மஸி கல்லுாரியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்லூரி மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×