என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் செல்போன் கடை மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி
- கோவையில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது.
- திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து ரோட்டோரத்தில் உள்ள செல்போன் கடை மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
கோவை:
கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஓம் பிரகாஷ் (வயது 20).
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பீளமேடு சித்ராவில் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றார்.
பின்னர் பார்ட்டி முடிந்ததும் ஓம் பிரகாஷ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந் தினேஷ்குமார் (23), திருப்பூரை சேர்ந்த ஆதித்யா சரவணன் (23), பிரதீப் (21),திருச்சியை சேர்ந்த பிரகதீஸ்வரன் (22), ஊட்டியை சேர்ந்த ரித்தீஸ் (21) ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்கு புறப்பட்டனர்.
தினேஷ்குமார் காரை ஓட்டி வந்தார். அவர் மது போதையில் இருந்துள்ளார். கார் நள்ளிரவு 1.30 மணியளவில் அவினாசி ரோட்டில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து ரோட்டோரத்தில் உள்ள செல்போன் கடை மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கல்லூரி மாணவர்கள் 6 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் ஓம்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தினேஷ்குமார், ஆதித்யா சரவணன், பிரதீப், பிரகதீஸ்வரன், ரித்தீஸ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம் நாகப்பன் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார். நேற்று இவர் புதிதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு மேம்பாலத்தில் தனது நண்பருடன் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்