search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திண்டிவனம் - நகரிஇடையே  ரெயில்வேக்காக கையக ப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு: கலெக்டர் பழனி தகவல்
    X

    திண்டிவனம் - நகரிஇடையே ரெயில்வேக்காக கையக ப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு: கலெக்டர் பழனி தகவல்

    • விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தகவல் கூறியுள்ளார்.
    • உரிய நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது,

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனம் முதல் நகரி வரை புதிய அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக சலவாதி, தாதாபுரம், கருவம்பாக்கம், பெரப்பேரி, கீழ்மாவிலங்கை, ரோஷணை, மேல்பாக்கம், மேல்மாவிலங்ககை, புத்தனந்தல், வடம்பூண்டி, ஊரல் மற்றும் வெள்ளிமேடுபேட்டை ஆகிய 12 கிராமங்களில் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 10/99)-ன்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இறுதி தீர்வம் வெளியிட ப்பட்டுள்ளது. இறுதி தீர்வத்தின் அடிப்படையில் 63% இழப்பீட்டுத் தொகை உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இறப்பு முகாம்கள்மேலும், எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகை பெறவேண்டியுள்ள உரிமைக்கான பதிவு ஆவணங்கள், இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் வங்கியில் அடமானம் மீட்கப்பட்ட பதிவு ஆவணங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 17.04.2023 முதல் 19.04.2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை திண்டிவனம் வட்டம், ஜக்காம்பேட்டை கிராமத்தில் உள்ள திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    எனவே அவ்வமையம் தொடர்புடைய பட்டாதாரர்கள் பட்டா நகல், வில்லங்கச்சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகை இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால் சான்றுகள் பெறு வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உரிய சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். உரிய நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×