search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் பாதுகாப்பு சம்பந்தமாக போட்டிகள்- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
    X

    போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவிக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி. 

    மின் பாதுகாப்பு சம்பந்தமாக போட்டிகள்- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

    • பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் அமைக்கப்பட்டு தொடர்ச்சி யாக மாணவ-மாணவிகள் மத்தியில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

    அதன்தொடர்ச்சியாக பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார்.

    மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு சம்பந்தமாக நடந்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்ட ஆற்றல் மன்ற ஆய்வு அதிகாரியான பொது பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வெங்கடேஷ் மணி மாணவ-மாணவி களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் விதிக்கப்பட்ட கடந்த மின் கட்டணத் தொகைக்கும், அடுத்து விதிக்கப்படும் கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு தங்கள் முன்னெடுத்த மின் சிக்கனத்தை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜன் மற்றும் அன்பு ஸ்டார்லின், ஆற்றல் மன்ற குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×