search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

    • ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.
    • காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    கிருஷ்ணகிரி,

    கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்து காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், இளைஞர் காங்கிரஸ் ஆதில், வேப்பனப்பள்ளி கல்யாணி, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், வட்டாரத் தலைவர் சித்திக், இர்பான், மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அஜீஸ்உல்லா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கவியரசன், மாவட்ட துணைத் தலைவர் நரசிம்மன், மாவட்ட பொதுச் செயலாளர் கமால்கான், நகரத் துணைத் தலைவர் மரிய இருதயம், நகர செயலாளர் அமுல்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், விஜயராஜ் என்கிற குட்டி, பாபு, சொக்கலிங்கம், சரவணகுமார், மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×