search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
    X

    கோவையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    • ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்
    • போலீசார் 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

    ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தி்ற்கு கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×