search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் முற்றுகை போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிய காட்சி.

    மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் முற்றுகை போராட்டம்

    • வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டபிள்யூ.ஜி.சி. சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர் ஐசன்சில்வா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்தோபர், மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி கனியம்மாள், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், விஜயராஜ், கோபால், நாராயணசாமி, ஜெயராஜ், சின்ன காளை, வெங்கட சுப்பிரமணியம், கனகராஜ், மணி, ராஜா, மெர்லின் ஜெபசிங், குமாரமுருகேசன், தாமஸ், தனுஷ், சுப்பிரமணி, அம்மாகிட்ட, மீனாட்சி, சுகுணா, சரஸ்வதி, சுடலைமாடி, மல்லிகா உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    Next Story
    ×