search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்
    X

    தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்

    • பேரூர் கழகச் செயலாளருமான வெங்க டேசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மேலும் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தி.மு.க. பேரூர் கழக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளைச் செயலா ளர்கள் ஆலோ சனைக் கூட்டம் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழகச் செயலாளருமான வெங்க டேசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார்.

    மேலும் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது மாரண்டஅள்ளியில் உள்ள 8 வாக்குச்சா வடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் தங்கள் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும், தலைமை கழகம் அறிவித்துள்ள ஒரு கோடி உறுப்பி னர்களை சேர்ப்பது தொடர்பாக 15 வார்டு கிளைச் செயலாளர்களுக்கும் ஆலோ சனை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், காரிமங்கலம் மேற்கு ஓன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாம்பே சக்தி, மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் கார்த்தி கேயன், யதிந்தர், வெங்கடேசன், சத்யா சிவகுமார், ரீனா லட்சுமி, கீதா, அபிராமி மற்றும் தி.மு.க. பிரதிநிதிகள் குழந்தைவேலு, வடிவேலு, காந்தி, முனிராஜ், ரமேஷ் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×