search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வகுப்பறை திறப்பு விழாவில் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்களை செருப்பின்றி நிற்க வைத்ததால் சர்ச்சை
    X

    வகுப்பறை திறப்பு விழாவில் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்களை செருப்பின்றி நிற்க வைத்ததால் சர்ச்சை

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.
    • பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் அதன் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதன் பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் பண்டாக்கர் (மும்பை), சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஷெல்கே மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் வர இருந்தனர். இவர்களை நுழைவு வாயிலில் வரவேற்க பள்ளி மாணவ, மாணவிகளை சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல் நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×