search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாநாட்டுக்கு சென்ற தொண்டர்களுக்கு  திருச்சியில் சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்பட்டது
    X

    மாநாட்டுக்கு சென்ற தொண்டர்களுக்கு திருச்சியில் சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்பட்டது

    • விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
    • மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன

    திருச்சி:

    விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வாகனங்களில் செல்வோர் திருச்சி புறநகர் பகுதியில் ஓய்வெடுத்து செல்லவும், அவர்களுக்கு காலை உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அவர்களூக்கு மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

    இதற்காக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.எல்.சீனிவாசன் தலைமையில் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இணைந்து 6 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயார் செய்தனர். புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. பின்பு அவை பொட்டலங்களாக கட்டப்பட்டு மாநாட்டுக்கு சென்ற தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

    த.வெ.க. தொண்டர்கள் இணைந்து நடிகர் விஜய்க்காக தங்களது சொந்த பணத்தில் இந்த உணவை தாயார் செய்ததாக தெரிவித்தனர். இரவு முழுவதும் கண்விழித்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக வி.எல்.சீனிவாசன் தெரிவித்தார்.

    Next Story
    ×