search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காட்டு யானை முட்டி பசுமாடு சாவு
    X

    காட்டு யானை முட்டி பசுமாடு சாவு

    • யானை ஆக்ரோஷமாக முட்டியதில் பசு மாடு படுகாயம் அடைந்து உயிரிழந்தது .
    • பசுமாட்டிற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபு(வயது 40).

    இவருக்கு சொந்தமான பசு மாட்டை இரவு வந்த காட்டு யாணை ஆக்ரோஷமாக முட்டியதில் பசு மாடு படுகாயம் அடைந்து உயிரிழந்தது . பசுமாட்டிற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலும் ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி, சொக்கன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தினதோறும் வனத்திலிருந்து வெறுயேரும் காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது மட்டுமின்றி பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×